News April 24, 2025

அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 28, 2025

திருச்சி: 23.13 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்

image

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 23,68,967 வாக்காளர்களில் நேற்று (நவ.27) மாலை நிலவரப்படி 23,13,892 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 18,02,100 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி: டிட்வா புயல் எச்சரிக்கை – கலெக்டர்

image

‘டிட்வா’ புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் 154 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல், மழை தொடர்பான புகார்களை 1077 என்ற எண் அல்லது 0431-2418995 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி: வெளுத்து வாங்க போகும் மழை..

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருச்சி மாவட்டத்தில் இன்று கனமழையும், நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய மிக கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!