News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 24, 2025
திருச்சி: 4 வயது சிறுவன் மீது கார் மோதி விபத்து

முசிறியை சேர்ந்த மரியே நேற்று தனது நான்கு வயது மகனுடன் குணசீலம் அருகே சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே கார் ஓட்டி வந்த கோவிந்தன் என்பவர், காரை அலட்சியமாக ஓட்டி வந்ததில் 4 வயது சிறுவன் திவாகர் மீது மோதியல் அவர் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 24, 2025
திருச்சி: ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், தனது கைப்பையில் மறைத்து கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்பிலான மெத்த பைட்டமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் இக்கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 24, 2025
திருச்சிக்கு மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று(நவ.24) இடி, மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன


