News April 24, 2025

அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

திருச்சி: ரூ.50,000 பரிசு அறிவிப்பு!

image

நவல்பட்டு அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் 6-ம் ஆண்டு கபடி போட்டி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ.20,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

திருச்சி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in/ என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

திருச்சி: தனியார் பஸ் மோதி பரிதாப பலி

image

லால்குடி பெருவெள்ளநல்லூரை சேர்ந்தவர் சங்கர் (54). இவர் திருச்சி கே.கே.நகரில் இருந்து மன்னார்புரம் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சர்வீஸ் ரோடு சந்திப்பு பகுதியில் அவ்வழியாக வந்த தனியார் பஸ் சங்கர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பஸ் டிரைவர் உதயகுமார் (30) மீது வழக்கு பதிந்த போலீசார், பேருந்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!