News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 9, 2026
கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் <
News January 9, 2026
கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்; பாய்ந்த போக்சோ!

சிதம்பரம் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கபிலன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி அடிக்கடி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதில் சிறுமி கருவுற்ற நிலையில், அவரது பெற்றோர் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் கபிலன் மீது போக்சோ வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
News January 9, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலிசார் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.8) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.9) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


