News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 13, 2025
கடலூர்: சென்டர் மீடியனில் மோதி இளைஞர் பலி

குறிஞ்சிப்பாடி அடுத்த தொப்புளிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(36). இவர் தனது பைக்கில் நேற்று பெத்தநாயக்கன்குப்பம் அருகில் சென்ற போது, சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 13, 2025
கடலூர்: நடப்பாண்டில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
கடலூர்: நடப்பாண்டில் 393 வழக்குகள் பதிவு

கடலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக நடப்பாண்டில் இதுவரை 95 புகார்கள் பெறப்பட்டதில் 11 திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. 84 புகார்கள் தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகிறது. காவல் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.


