News August 15, 2024
அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பாராட்டு

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் 18540 பணியாளர்களில் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், பரிசோதகர், ஓட்டுநர் பயிற்றுனர், அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர் மற்றும் கிளை மேலாளர் என அனைத்து மண்டலங்களையும் சேர்த்து 316 நபர்களுக்கு இன்று பரிசளிக்கப்பட்டது. பணியாளர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 2, 2025
விழுப்புரம்: பைக் மோதி ஒருவர் பரிதாப பலி

கிளியனூர் அடுத்த டீ பரங்கிணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் புதுக்குப்பத்தில் நிகழ்ச்சிக்கு சென்று தன் நண்பருடன் வரும் போது டீ பரங்கினி சாலையில் எதிரே வந்த பைக் மோதி மோதி செல்லமுத்து படுகாயமடைந்தார். இருவரையும் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் செல்லமுத்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News December 2, 2025
தவறவிட்ட தங்க நகை: மீட்டு தந்த போலீசார்

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பிரசாந்தி என்பவர் திருவண்ணாமலையிலிருந்து இன்று சென்னை திரும்பும் வழியில் திண்டிவனம் அருகே உள்ள உணவகத்தில் தவறவிட்ட 18 சவரன் தங்க நகைகள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை ரோஷனை போலீசார் உரியவரிடம் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
News December 2, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணி காவல்துறையினர் விவரம்!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


