News April 16, 2024
அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

திருப்புவனம் அருகே கமுகேர்கடை நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. தனியார் பேருந்து முன் பக்கம் சேதமானது. பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இரண்டு பேருந்துகளையும் திருப்புவனம் காவல்துறை கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
Similar News
News April 22, 2025
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே பலி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்போஸ் என்ற விவசாயி தனது டிராக்டரில் திருப்புவனம் சென்றுவிட்டு தனது கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கால்வாய் அருகே எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News April 22, 2025
கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பட்ட ஆணையத்தின் சார்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு உறைவிடம் சாராத இலவச பயிற்சி 21 நாட்கள் வழங்கப்பட இருக்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மே மாதம் 15 ஆம் தேதி வரை இதில் தடகளம், கால்பந்து, கபடி ஹாக்கி ,கூடைப்பந்து போட்டிகள் சிவகங்கை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 – 6.30 மணி வரையிலும் பயிற்சி நடைபெறும்
News April 22, 2025
திருக்கோஷ்டியூர் மஞ்சுவிரட்டில் வயதான மூதாட்டி

திருக்கோஷ்ட்டியூர் ஶ்ரீ வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று (21-04-2025), திருக்கோஷ்டியூரில் நடந்த மஞ்சுவிட்டில் இளையாத்தங்குடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் சொந்த காளையை தானே போட்டியில் அவிழ்த்துவிட கொண்டு வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.