News May 17, 2024
அரசு பேருந்து நடத்துநர் கையை கடித்த விசிக பிரமுகர்

வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்கியது. அப்போது பேருந்துக்கு பின்னால் டூவீலரில் வந்த விசிக பிரமுகர் ரசித் அலி வழிவிடுமாறு கூறவே, அரசு பேருந்து நடத்துநர் ராஜேந்திரனுக்கும், ரசித்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நடத்துநர் கையை ரசித் கடித்துள்ளார். நடத்துநர் சிகிச்சை பெறும் நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 22, 2025
பெரம்பலூர் மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற நவ.24ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர்கள் மற்றும் நிறுவன விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர் இது தொடர்பாக புகார் மற்றும் குறைகள் இருப்பின் இக்கூடத்தில் பங்கேற்று, தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
பெரம்பலூர்: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 22, 2025
பெரம்பலூரில் வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள்!

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.


