News April 21, 2025
அரசு பஸ் மோதி பட்டதாரி வாலிபர் பலி

திண்டிவனம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால்(23). இவர், திண்டிவனத்தில் உள்ள பேக்கரியில் பகுதி நேர பணி செய்து வந்தார். நேற்று நான்கு முனை சந்திப்பில் பைக்கில் சென்றபோது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் பைக்குடன் சிக்கிய கோபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திண்டிவனம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 2, 2026
நாட்டு வெடி வீசி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் – இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் நந்தகோபால். இவர் திருவக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தி வெடிகுண்டு தயார் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் வெடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து வானூர் போலீசார் நந்தகோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 2, 2026
விழுப்புரம்: 12th PASS – ரயில்வேயில் 312 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <
News January 2, 2026
விழுப்புரம்: சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

விழுப்புரம்: சென்னையை சேர்ந்த அதிதிகுப்தா (22) தனது நண்பர்கள் 4 பேருடன் புத்தாண்டை கொண்டாட புதுச்சேரி சென்றுள்ளார். திண்டிவனம் அருகே கிளியனூர் அருகே சென்றபோது, ஒரு பைக் குறுக்கே வந்ததால், மோதாமல் இருக்க காரை திருப்பினார் டிரைவர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் படுகாயமடைந்த நிலையில், அதிதி உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


