News March 17, 2025

அரசு பஸ் மோதியதில் இரண்டு பெண்கள் காயம்

image

சேலம், ஆத்தூர் பகுதி சேர்ந்த அம்மம்பாளையத்தில் இரண்டு பெண்கள் நேற்று, இரவு 8:00 மணி அளவில் மோட்டார் பைக்கில் அம்மம்பாளையம் சாலையை கடக்கும் பொழுது ஆத்தூர் டு சென்னை சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து 2 பெண்களை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஒரு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல். . 

Similar News

News April 21, 2025

சேலம்: TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஏப்.22) காலை 09.30 மணிக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கான இலவச சிறப்பு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0427- 2401750 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News April 21, 2025

எர்ணாகுளம்-பாட்னா இடையே சிறப்பு ரயில்

image

எர்ணாகுளம்-பாட்னா சிறப்பு ரயில் (06085) வரும் ஏப்ரல் 25, மே 2, 9, 16, 23, 30-ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு அடுத்தநாள் அதிகாலை 3.25க்கும், திருப்பூருக்கு அதிகாலை 4.15க்கும், ஈரோட்டிற்கு அதிகாலை 5.05க்கும் வந்து சேலத்திற்கு காலை 6.12மணிக்கு வந்தடைகிறது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News April 21, 2025

கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில்

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் அமைந்துள்ளது காமநாதீஸ்வரர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!