News April 22, 2025
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 போதை ஆசாமிகள் ” கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்பு” என அவரிடம் வம்பு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 28, 2025
தர்மபுரி: கதவை உடைத்து திருட முயன்ற திருடன் கைது…!

தர்மபுரி வன்னியகுளத்தைச் சேர்ந்த தனசேகரனின் வீட்டில் கதவு உடைக்கப்பட்டும், பொருட்கள் எதுவும் திருடப் படாத சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவரெட்டியூர் விஜய் (29) கைது செய்யப்பட்டார். அவர் மீது 2023 கோவை நகைக்கடை 6 கிலோ தங்க மாயம் வழக்கும், தர்மபுரியில் 50 பவுன் திருட்டு வழக்கும் உள்ளிட்ட இரு வழக்குகளில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
News November 28, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று (நவ-27) இரவு – இன்று (நவ.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
News November 28, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று (நவ-27) இரவு – இன்று (நவ.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


