News April 22, 2025
அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை தருமபுரி 4 ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 போதை ஆசாமிகள் ” கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும், உடனே பஸ்சை திருப்பு” என அவரிடம் வம்பு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News September 18, 2025
தர்மபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தர்மபுரியில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ தர்மபுரி நகராட்சி – பிபிசி மஹால், எஸ்.வி சாலை
✅ தர்மபுரி வட்டாரம் – ஆர்பிஆர்எஸ், மண்டபம், செட்டிகரை
✅ பாப்பிரெட்டிப்பட்டி – சமுதாயக் கூடம், இருளப்பட்டி
✅ பென்னாகரம் – பிலியனூர் நாகாதாசம்பட்டி கேபிஎஸ் மஹால்
✅ பாலக்கோடு – எம்.செட்டிஹள்ளி (விஎம் மஹால்)
✅ அரூர் – குமுதம் மஹால், கே.வெட்டர்பட்டி (SHARE IT)
News September 18, 2025
மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றியும் ஏழ்மையில் இறந்த நான்கு முதியவர்களின் உடல்களை, தங்கள் உறவாக கருதி மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் எல்லைகளில் காவலர்கள், சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். இதுவரை 166 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவர்களின் சேவைக்கு பாராட்டும் ஆதரவும் தந்து வருகின்றனர்
News September 17, 2025
ரூ.356.48 கோடி ஓய்வூதியம்; ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தேசிய முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம்,தமிழர்களுக்கான ஓய்வூதியம் என 59,365 நபர்களுக்கு ரூ.356.48 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.