News April 15, 2025

அரசு பஸ்களில் கியூ ஆர்கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் கியூ ஆர்கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 70% அரசு பஸ்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் டவுன் பஸ்கள்,புறநகர் பஸ்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் இது அமலுக்கு வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Similar News

News December 7, 2025

குமரி: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக கூறி அவர்களிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்த பினு என்பவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 7, 2025

குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்தனர். கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 7, 2025

குமரி: அரசு வேலை.. ரூ.23 லட்சம் மோசடி! தாய் மகன் மீது வழக்கு

image

நாகர்கோவிலை சேர்ந்த ஜீவா நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தனக்கும் சிலருக்கும் கீதா மற்றும் அவரது மகன் ஆகியோர் சேர்ந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிமன்றம் உத்தரவின் பேரில் வடசேரி போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

error: Content is protected !!