News April 15, 2025

அரசு பஸ்களில் கியூ ஆர்கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் கியூ ஆர்கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 70% அரசு பஸ்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் டவுன் பஸ்கள்,புறநகர் பஸ்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் இது அமலுக்கு வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Similar News

News November 22, 2025

குமரி: CSIF வீரர் தற்கொலை

image

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே களியல் சிறுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு படை (CSIF) வீரர் சுனில் ராஜ் (39). இவருக்கும் மனைவி சிவராணிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி வீட்டில் சென்று பார்த்த போது சுனில் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 22, 2025

குமரி: அவசர உதவி எண்கள் அறிவித்த கலெக்டர்!

image

குமரி ஆட்சியர் நேற்று கூறியதாவது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டுஅறையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி எண்- 1077 மற்றும் 04652 231077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார். SHARE

News November 22, 2025

குமரி: அவசர உதவி எண்கள் அறிவித்த கலெக்டர்!

image

குமரி ஆட்சியர் நேற்று கூறியதாவது, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கட்டுப்பாட்டுஅறையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அமர்த்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி எண்- 1077 மற்றும் 04652 231077 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார். SHARE

error: Content is protected !!