News April 4, 2025
அரசு பள்ளி விழாக்களில் திரைப்படப் பாடலுக்கு தடை

ராணிப்பேட்டை அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவின் போது சாதிய வன்மத்தை தூண்டும் பாடல்கள், கட்சிக் கொடிகள், குறியீடுகள் போன்றவற்றை கொண்டு நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்றும், திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடுவதை தடைச் செய்தும் பள்ளி கல்வி துறை இயக்குனர் அதற்கான சுற்று அறிக்கையை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரியில் சாதி ரீதியில் நடனமாடியது சர்ச்சையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 21, 2025
ராணிப்பேட்டை: வீட்டில் பதுக்கி மது விற்றவர் கைது!

அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் பகுதியில் தாலுகா போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது, சட்டவிரோதமாக மது விற்ற செல்வராஜ் (49) என்பவரைக் கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 95 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
ராணிப்பேட்டை: கிணற்றில் தவறி விழுந்த மாணவி பலி

வாலாஜாபேட்டை அடுத்த ஏடாகுப்பம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சவிதா. நேற்று (டிச.20) சனிக்கிழமை விடுமுறை என்பதால் தனது தாயுடன் அருகில் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். மகள் சென்று வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த விவசாய கிணற்றில் சவிதாவின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல், இன்று (டிச.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


