News May 10, 2024
அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும் மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 86.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 94.34 சதவீதமாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.77 சதவீதமாகவும் உள்ளது.
Similar News
News December 6, 2025
நெல்லை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

சீவலப்பேரி பொட்டல் பச்சேரி பகுதியை சேர்ந்த அந்தோனி மகன் மிக்கேல் (47). விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 6, 2025
நெல்லை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு..!

நெல்லை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 6, 2025
நெல்லை: வழுக்கி விழுந்த இளைஞர் பரிதாப பலி!

கங்கைகொண்டான் ஆலடிபட்டி பகுதியை சேர்ந்த முருகையா என்பவருடைய மகன் கருப்பசாமி (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளித்துவிட்டு வந்தபோது எதிர்பாரதவிதமாக டைல்சில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.


