News March 26, 2025
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

கடலூர் விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்.மஹால் அருகே உள்ள ஏ.கே.டி. நீட் பயிற்சி மையங்களில், 100% கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு இன்று (மார்ச்.26) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நீட் மறுதேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தேர்வு எழுத 6369146590, 9361165429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.
Similar News
News July 6, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் தொலைபேசி எண்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (05/07/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
கடலூர்: வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாகியும், தொடர்ந்து பதிவை புதுப்பித்து வரும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. அதன்படி குடும்ப வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்கும் இளைஞர்கள் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், 3 ஆண்டுகள் உதவி தொகை வழங்கப்படும். இதனை அனைவருக்கும் SHARE செய்யவும்.!
News July 5, 2025
கடலூரில் சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி..!

கடலூர் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் (அ) அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு <