News March 26, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

image

கடலூர் விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்.மஹால் அருகே உள்ள ஏ.கே.டி. நீட் பயிற்சி மையங்களில், 100% கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு இன்று (மார்ச்.26) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் நீட் மறுதேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தேர்வு எழுத 6369146590, 9361165429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News January 9, 2026

கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

கடலூர்: அரசு அதிகாரி மீது தாக்குதல்

image

காட்டுமன்னார்கோவில் அருகே ஓமாம்புலியூரில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்கால் ஓரமாக மாளிகைமேட்டை சேர்ந்த கணேசமூர்த்தி (37) ஜல்லி, எம்.சாண்ட், மணல் ஆகியவற்றை குவித்து வைத்து வியாபாரம் செய்தார். இதை பார்த்த குமராட்சி ஒன்றிய நீர்ப்பாசன ஆய்வாளர் கலியமூர்த்தி, அதை அகற்ற கூறியதால் கலிய மூர்த்தியை தாக்கினார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து கணேச மூர்த்தியை நேற்று கைது செய்தனர்.

News January 9, 2026

கடலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. எனவே இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் <>https://tanfinet.tn.gov.in <<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!