News March 27, 2025

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

image

கடத்தூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்த சம்பவத்தால் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி உணவின் தரம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

தருமபுரி: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து (டிச.8)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

தருமபுரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

தருமபுரி: முஸ்லிம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த சாமியார்

image

பொம்மிடி நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரஷியா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்த ஆண்கள் எழுந்து வேறு இடம் சென்றனர். தொடர்ந்து பெண்கள் ஒன்றாக சேர்ந்து சேலைகளை சுற்றி தடுப்பு ஏற்படுத்தினர். அப்போது, காவி உடை அணிந்த சாமியார் போன்ற தோற்றத்தில் இருந்த பெண் ஒருவர் வந்து அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

error: Content is protected !!