News August 25, 2024
அரசு பள்ளியில் படித்த 3 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம்

திருப்பத்தூர் அருகே பெரிய கண்ணாலப்பட்டி பள்ளியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் படித்த தனுஷ், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபன் ராஜ், 2022-2023 கல்வி ஆண்டில் படித்த ஸ்ரீதர்ஷினி ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 பேருக்கும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்ததுள்ளது. இவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூரில் மின்தடை அறிவிப்பு!

திருப்பத்தூர் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு நாளை (நவ.29) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்பத்தூர், கந்திலி, புது பெட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. மின்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையான முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டு.
News November 28, 2025
திருப்பத்தூர் தேர்வர்களே தெரிந்து கொள்ளுங்கள் – தேதி மாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் ‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (நவ.29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, டிசம்பர்.6-ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் இன்று (நவ.28) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு எழுதும் திருப்பத்தூர் மாணவர்கள் இந்த அறிவிப்பினை தெரிந்து கொள்ளுங்கள் உடனே மற்ற மாணவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-28) “உனது பாதுகாப்பு உன் கையில் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவதை மறவாதீர்…! என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.


