News August 25, 2024
அரசு பள்ளியில் படித்த 3 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம்

திருப்பத்தூர் அருகே பெரிய கண்ணாலப்பட்டி பள்ளியில் 2021-2022ஆம் கல்வி ஆண்டில் படித்த தனுஷ், பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தீபன் ராஜ், 2022-2023 கல்வி ஆண்டில் படித்த ஸ்ரீதர்ஷினி ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 பேருக்கும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்ததுள்ளது. இவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

திருப்பத்தூர் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
JUST IN:ஜலகம்பாறையில் வெள்ளப் பெருக்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் கனமாஇ பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாதளமான ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், தற்போது நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இந்த வெள்ளப் பெறுக்கு காரணமாக அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க!
News November 6, 2025
திருப்பத்தூர்: மிஷின் மீது விழுந்து கொடூர பலி!

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட, அம்பேத்கர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் தோல் தொழிற்சாலையில், பாங்கிஷாப் பகுதியைச் சேர்ந்த முனிசாமி என்பவர் இன்று (நவ.6) தோல் பதனிடும் இயந்திரத்தின் மீது ஏறி பணியாற்றி வந்த நிலையில், திடீரென இயந்திரத்தின் மீது இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


