News March 26, 2025

அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

image

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.

Similar News

News December 13, 2025

புதுச்சேரி: அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சனிக்கிழமையான இன்று (டிச.13) இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சிவகாமி நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது பருவத் தேர்வும், +2 மாணவர்களுக்கு முதலாவது மாதிரி பொதுத் தேர்வும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வியாழக்கிழமை அட்டவணையின்படி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

News December 13, 2025

புதுச்சேரி: கொலை செய்த வாலிபர் கைது

image

புதுச்சேரியில் கள்ளத்தொடர்பு காரணமாக மாயமான பெண், அடித்து சாக்கு மூட்டையில் கட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற கள்ளத்தொடர்பில் வேறு ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த ஐயப்பன் என்ற வாலிபர், இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

News December 13, 2025

புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “வரும் 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!