News March 26, 2025
அரசு பள்ளிகளில் சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும் – அமைச்சர்

சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், புதுவை நகரப்பகுதியில் – 2, கிராமப்புறங்களில் – 2 , காரைக்காலில் – 1 என நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும். அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும், என்றார்.
Similar News
News January 7, 2026
புதுச்சேரி: ஆன்லைன் மோசடியில் ரூ.5.25 லட்சம் இழப்பு

முதலியார்பேட்டை பகுதியில் வசிக்கும் நபருக்கு, போலியான ஆர்.டி.ஓ. பெயரில் இ-செலான் லிங்க் வந்துள்ளது. அதனை நம்பி வங்கி விவரங்களை அதில் உள்ளிட்டதால், அவரது கணக்கில் இருந்து ரூ.3,64,718 பறிக்கப்பட்டது. இதேபோல் மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.5,25,148 ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
புதுவை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுச்சேரி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News January 7, 2026
புதுச்சேரி: பேன்சி எண்கள் ஏலம்!

காரைக்கால் போக்குவரத்து துறையின் py-02 Z வரிசையில் உள்ள பேன்சி எண்கள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதள மூலம் வரும் ஜன.13ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேவையான username மற்றும் password-ஐ மேற்கண்ட இணையத்தில் ‘New Public User’ மூலம் வரும் 12ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.


