News February 19, 2025

அரசு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு

image

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு, நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வரும் 22ம் தேதிக்குள் தங்களது விருப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

Similar News

News February 22, 2025

விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய புதுச்சேரி போக்சோ கோர்ட்டு

image

விழுப்புரம் மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(31) கடந்த 27.06.2019 அன்று திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜானகிராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பெற்றோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

News February 21, 2025

புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்க ஒப்புதல்

image

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதம் எழுதி கோரிக்கை வைத்தார் அந்நிலையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கும் மற்றும் பாண்டியிலிருந்து கடலூர் வரை உள்ள 20கிமீ ரோட்டை அகலப்படுத்தவதற்கும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

News February 21, 2025

பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை கைது

image

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் தானாம்பாளையம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிட்டதாக, பிரபல யூ-டியூபர் கார்த்திக் பிள்ளை என்பவரை புதுச்சேரி போலீசார் இன்று அதிகாலை சென்னையில் வைத்து கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!