News May 16, 2024

அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <>-1<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

பெரம்பலூர்: அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

image

பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஆயத்த கூட்டம் நேற்று (நவ.10) மாலை 6 மணிக்கு வருவாய் அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட, வட்டார உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் வருகின்ற 18.11.25 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.

News November 11, 2025

பெரம்பலூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரம் பெற அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 30.11.2025–குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News November 11, 2025

பெரம்பலூர்: 356 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று (நவ.10) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 356 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!