News May 16, 2024

அரசு ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு (ம) பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ம) 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு <>-1<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

பெரம்பலூர்: 11.11.2025 இந்த தேதியை மறக்காதீர்!

image

பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.11.2025-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

பெரம்பலூர்: சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்/ அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 12.11.2025-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

பெரம்பலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!