News May 7, 2025

அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போமில் TN CM HELPLINE என்ற appஐ பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதினர்களுக்கும் சேர் செய்யுங்கள்.

Similar News

News October 18, 2025

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி மாணவர் பலி

image

செம்பனார்கோயில், சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன் மகன் நவீன் குமார் (18). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக தனது சட்டையை இஸ்திரி செய்தபோது இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

News October 18, 2025

மயிலாடுதுறை: கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ்

image

மயிலாடுதுறையில் இரு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடியமங்கலம் பகுதியில் காதல் முன்விரோதத்தால் வைரமுத்துவை கொன்ற குகன், அன்புநிதி ஆகியோர், மேலும் கொள்ளிடம் பகுதியில் லட்சுமணனை கொன்ற ராகுல், ராஜா (எ) ராமசந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

News October 18, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.17) இரவு 11 மணி முதல், இன்று(அக்.18) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!