News May 7, 2025

அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போமில் TN CM HELPLINE என்ற appஐ பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதினர்களுக்கும் சேர் செய்யுங்கள்.

Similar News

News December 18, 2025

நாகை: அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய உடல்!

image

வேதாரண்யம், மனியன்தீவு கடற்கரையில் ஆண் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி அங்கேயே பிரேத பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர். மேலும் இது யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News December 18, 2025

நாகை : பசுமை சாம்பியன் விருது பெற அழைப்பு- -ஆட்சியர்

image

2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது பெற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த அலுவலகங்கள் நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் குடியிருப்பு நல சங்கம் ,தனிநபர்கள் உள்ளாட்சி அமைப்பு தொழில் துறைகள் போன்றவற்றிற்கு வழங்கப்பட உள்ளது.www.tnpcp.gov இந்த படிவத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன. 20க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News December 18, 2025

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!