News April 15, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் வரும் ஏப்.,21ஆம் தேதி வரை <
Similar News
News November 17, 2025
கோத்தகிரி அருகே அரசு பேருந்து விபத்து!

கோத்தகிரியில் இருந்து நெடுகுளா செல்லும் சாலையில் ராஜ்நகர் பகுதியில் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை கிரேன் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடந்தது. அப்போது அந்த வழியாக அரசு பஸ் சுண்டட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவால் எதிர்பாராதவிதமாக கிரேனின் இரும்பு கொக்கி அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
News November 17, 2025
குன்னூர் பகுதியில் தடை அறிவிப்பு

குன்னூர் அருகே லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் ஆகிய சுற்றுலா காட்சி முனை இடங்களுக்கு செல்லும் சாலையில் காங்கிரீட் சாலை பணிகள் நடைப்பெறுகிறது. அதனால் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது . அதையும் மீறி செல்லும் வாகனங்கள் CMS பகுதியிலேயே திருப்பி அனுப்பப்படும். இந்த சாலை பணி ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது.
News November 17, 2025
நீலகிரி: வாக்காளர் சிறப்பு முகாம் ஆய்வு

நீலகிரி மாவட்டம், பாலகொலா ஊராட்சி தங்காடு கிராமத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த (SIR) முகாமை இன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்முகாமில் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை வாக்குபதிவு அலுவலர், கோட்டாட்சியர், உதவி வாக்குபதிவு அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உடன் சேர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டனர்.


