News March 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை https://www.arasubus.tn.gov.in/ இணையத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News July 5, 2025
புதுக்கோட்டை: பெண் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அழகன்வயலை சேர்ந்தவர் சத்யபிரியா (26). இவருக்கு திருமணம் ஆகி 3 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். கணவன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று மணமேல்குடி பாரதி நகரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்திய பிரியாவின் தந்தை அளித்த புகாரில் மணமேல்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 5, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜூலை 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News July 4, 2025
புதுக்கோட்டை: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <