News March 26, 2025

அரசுப் பள்ளியில் இலவச மடிக்கணினிகள் திருட்டு

image

செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களில் சிலர் இந்த மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

செங்கல்பட்டு: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

image

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு <>கிளிக் <<>>செய்து, வழங்கப்பட்டுள்ள இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை அரசு தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு பகிருங்கள்!

News November 24, 2025

செங்கல்பட்டு திருப்பதி கோயில் பற்றி தெரியுமா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில். இக்கோயில் “தென்திருப்பதி” என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 420 அடி உயரத்தில் உள்ளது. திருப்பதியில் உள்ளது போல் அமைப்பும் பூஜை முறைகளும் இங்கு கடைபிடிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஷேர் பண்ணுங்க!

News November 24, 2025

செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!