News October 25, 2024
அரசுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும்: ராமதாஸ்

வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, 600 மகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.1.14 கோடி இழப்பு ஏற்படும். எனவே, பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளது” என்றார்.
Similar News
News August 11, 2025
விழுப்புரம்: மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர்,மெக்கானிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 515 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படை சம்பளம் ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 11, 2025
அன்புமணி ராமதாஸின் நடைப்பயணம் ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் திண்டிவனத்தில் இன்று (ஆக.11) நடைபெறவிருந்த பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணம் ஒத்திவைப்பு. இன்று நடைபெறவிருந்த நடைபயணம் நாளை மறுநாள் (ஆக.13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக நடைபயணம் நடைபெறும் என்று விளக்கம்.
News August 10, 2025
அரசு கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளான எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம் மாணவர் சேர்க்கைக்கு நாளை ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை அன்று முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வும், ஆகஸ்ட் 13ஆம் தேதி முதுநிலை அனைத்து பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் நாராயணன் தெரிவித்துள்ளார்