News December 31, 2024

அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட காவலர் சஸ்பெண்ட்

image

வேலூர் தாலுக்கா காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த அன்பரசன் தனது முகநூல் பக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக வெளியான பதிவுக்கு ஆதரவாக தனது கருத்து பதிவு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட காவல் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 20, 2025

வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

வேலூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 20, 2025

மறைந்த துணை மேயரின் தந்தை உடலுக்கு அமைச்சர் மரியாதை!

image

வேலூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சுனில்குமாரின் தந்தை மாணிக்கம் உடல் நலம் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு இன்று (நவ. 20) பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் உடன் இருந்தனர்.

News November 20, 2025

வேலூர்: ஒரே நாளில் 17 பேர் மீது வழக்கு பதிவு!

image

வேலூர், ஏரியூரில் உள்ள திறந்த வெளிமைதானத்தில், நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!