News May 17, 2024
அரக்கோணம்: ரயிலில் 16 கிலோ கஞ்சா! பேர் கைது

டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று(மே 16) அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது வேலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொது பெட்டியில் பயணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(37), ஒடிசாவை சேர்ந்த அர்ஜுன் மாலிக்(24) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 2, 2025
ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

ராணிப்பேட்டை மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
News November 2, 2025
ராணிப்பேட்டைக்கு வருகை தரும் துணை முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை (நவ.3) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிகிறார். இதில் அரசு சார்பில் 23,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தொடர்ந்து ராணிப்பேட்டையில் காமராஜர் தங்கியிருந்த நினைவு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், தனியார் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க உள்ளார். அந்த அரங்கத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 2, 2025
ராணிப்பேட்டை:ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.


