News October 17, 2025

அரக்கோணம்: போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மூவர்!

image

அரக்கோணம், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்வன்குமார், தன்வீர் & சின்டுயாதவ் என்ற பெண் ஆகியோர் மத்திய காவலர் பணியில் சேர தேர்வாகினர். மூவரும், தக்கோலம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், ஜனவரியில் பயிற்சியில் சேர்ந்தனர். இவர்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆய்வு செய்தபோது, அவை போலி என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 8, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..

News December 7, 2025

ராணிப்பேட்டை: தடையை மீறி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணியினர் கைது!

image

ராணிப்பேட்டை வாலாஜா பேருந்து நிலையத்தில் இன்று டிச.7ம் தேதி போலீஸ் அனுமதி இன்றி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர். ‘திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அரசு தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.’ மேலும், பேருந்து நிலையத்தில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News December 7, 2025

ராணிப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

ராணிப்பேட்டை G.B நகர் ஆதிபராசக்தி கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.13ம் தேதி நடைபெற உள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 10,000 நபர்களை நேர்காணலில் தேர்ந்தேடுக்க உள்ளன. இதில், 8th முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படித்த 18-40 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!