News September 14, 2024
அரக்கோணம் அருகே ரயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அரக்கோணம் வந்தபோது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறி திடீர் சோதனை நடத்தினர் . அப்போது ரயிலின் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனையிட்டதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பு!

ராணிப்பேட்டை: நெமிலியில் நேற்று(நவ.16) நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக கூட்டணி குறித்து வரும் டிசம்பரில் முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். பெண்கள் மீதான வன்முறை, போதைப் பிரச்சனை, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இதில் பேசப்பட்டன.
News November 17, 2025
ராணிப்பேட்டையில் மின் தடை அறிவிப்பு

ராணிப்பேட்டை: ஆற்காடு கோட்டத்திற்குட்பட்ட பாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (18.11.2024) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு மற்றும் தட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


