News August 10, 2024
அரக்கோணத்தில் ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் இடையே ஆக.12,14 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.10 முதல் 1.10 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வரை காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
BREAKING: ராணிப்பேட்டையில் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.3) விடுமுறை அளித்து என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!
News December 3, 2025
ராணிப்பேட்டை: தாய் வீட்டுக்கு சென்று திரும்பிய பெண் சாவு!

நெமிலி டவுன் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (27). இவர் நேற்று முன்தினம் திருத்தணியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புவனேஸ்வரியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 3, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் – நாளை (டிச.02) காலை வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


