News October 23, 2024
அயோடின் உப்பில் சேர்க்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை

அயோடின் குறைபாட்டால் தைராய்டு, அறிவு குறைவு, மனக்கோளாறு, கருச்சிதைவு போன்றவை ஏற்படுகிறது. இவ்வாறான பிரச்சனைகளைத் தவிர்க்க அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே உப்பு விற்பனை செய்பவர்கள் அயோடின் கலந்த உப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அயோடின் இல்லாத உப்பு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
நாகை: இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக கால்நடை பராமரிப்பு துறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் இணைந்து 180 பேருக்கு லாபகரமாக கால்நடைகள் வளர்ப்பது குறித்த பயிற்சி ஆறுமாத காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் ஆண் மற்றும் பெண்கள் அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE NOW!
News September 16, 2025
நாகை அருகே குளத்தில் மிதந்த பிணம்

வேதாரண்யம் தாலுகா, திருவாசக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
100% மானியம்: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவிகித மானியத்தில் கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் விவசாய சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். LIKE & SHARE..