News May 15, 2024

அம்மனுக்கு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மாங்காடு நகர செயலாளர் பிரேம்சேகர், குன்றத்தூர் ஒன்றிய பாசறை செயலாளர் எம்.பி.பாரத்ராஜ் ஏற்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, வி. சோமசுந்தரம், பா.பெஞ்சமின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் தங்க தேர் இழுத்து வழி பட்டனர்.

Similar News

News April 20, 2025

மனித உரிமையை நிலைநாட்டக்கூடியது: முதல்வர்

image

குன்றத்தூரில் நேற்று (ஏப்ரல் 19) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “தமிழ்நாட்டின் அனைத்து கைவினைக் கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினைத் திட்டம், சமூகநீதி, மனித உரிமை ஆகியவற்றை நிலைநாட்ட கூடியது” என தெரிவித்தார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது” என்றார்.

News April 20, 2025

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.

News April 20, 2025

ரூ.170 கோடி கடனுக்கு ஆணை வழங்கிய முதல்வர்

image

குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று (ஏப்ரல் 19) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.

error: Content is protected !!