News April 3, 2025

அம்பை வட்டார விவசாயிகள் கவனத்திற்கு

image

அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் விவசாயிகள் தங்கள் நில உடமை ஆகியவற்றை விண்ணப்பித்து அடையாளம் பெறுவது அவசியம். இதற்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் நலன் கருதி ஏப்ரல் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் கட்டாயம் அடையாளம் பெற வேண்டும் என்றார்.

Similar News

News November 23, 2025

BREAKING: நெல்லை வந்தடைந்த பேரிடர் மீட்பு படையினர்

image

நெல்லை மாவட்டத்திற்கு அதிக கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் இன்று (நவ.23) விடுக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் அதிநவீன உபகரணங்களுடன் தற்போது நெல்லை வந்தடைந்தனர். இன்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2025

நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவு . SHARE

News November 23, 2025

நெல்லை: லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள பள்ளக்கால் பொதுக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த குணசேகரன் என்பவருடைய மகன் முருகன் (22) என்பவர் அம்பாசமுத்திரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பணஞ்சாடி குளம் அருகே எதிரே வந்த லாரி இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!