News February 15, 2025

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராகினர். அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News November 26, 2025

விழுப்புரம்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 26, 2025

விழுப்புரத்தில் கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

image

விழுப்புரம் கே கே சாலை மருதமலை முருகன் நகர் பகுதியில் ராஜகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக சுரேஷ் உள்ளார். அவர் நேற்று (நவ.26) பூஜை முடித்து சென்று விட்டார். காலையில் வந்து பார்க்கும்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு வைத்திருந்த உண்டியலும் உடைக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 26, 2025

போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் கைது

image

கொடுக்கன்குப்பத்தில் மேல்மலையனூர் எஸ்.ஐ வினதா தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஆலமரத்தடியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பாரதியார்,ஸ்ரீதர்,சுரேஷ் பார்த்திபன்,லோகநாதன் ஆகியோர் கஞ்சா,போதை மாத்திரைகள் விற்பவர்கள் என தெரியவந்த நிலையில் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 15 கிராம்,கஞ்சா 7 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!