News February 15, 2025

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராகினர். அமைச்சர் உள்ளிட்ட நான்கு பேர் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை வரும் மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News September 18, 2025

விழுப்புரம்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி!

image

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் மரக்காணம்- திண்டிவனம் சாலையோரம் மின்மாற்றியில் நேற்று பழுது ஏற்பட்டிருந்தது. இதனை சரி செய்ய முருக்கேரி துணைமின் நிலைய மின் ஊழியர்கள் 10 பேர் சென்றிருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியரான ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 18, 2025

விழுப்புரம்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

image

விழுப்புரம் மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

விழுப்புரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

image

விழுப்புரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க! மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!