News November 23, 2024
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விவசாயிகள் கோரிக்கை

காங்கேயத்தில் நாய்கள் கடித்ததில் இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி, விவசாயிகள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினை சம்மந்தமாக கொள்கை முடிவெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை சம்பந்தமாக ஆவண செய்வதாக அவர் உறுதியளித்தார்.
Similar News
News November 16, 2025
திருப்பூரில் பெண் அதிரடி கைது!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகம்பாளையம் பகுதியில் சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட போலீசார் காளியம்மாள் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 16, 2025
திருப்பூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும்.
News November 15, 2025
திருப்பூரில் இரவு நேர வந்து பணியில் காவலர்கள்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் இன்றைய தினம் அனுப்பர்பாளையம் சரக உதவி ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


