News January 24, 2025

அமைச்சர் சக்கரபாணி வாழ்த்து

image

ஜனவரி 24 இன்று “தேசிய பெண் குழந்தைகள் தினம் ” மேலும் “ஆணுக்குப் பெண் இலைப்பிள்ளை காண் ” என்ற மகாகவியின் வரிகளுக்குகேற்ப இன்று பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனலாம், பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குவதும், பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அமைச்சர் சக்கரபாணி தனது சமூக வலைதள இன்ஸ்டா பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

Similar News

News November 27, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News November 27, 2025

நத்தம் அருகே நேர்ந்த சோகம்!

image

நத்தம்: சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி டூவீலரில் மங்களப்பட்டி பிரிவு அருகே ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது, பின்னால் சின்ன மலையூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. தடுமாறி விழுந்து பழனிச்சாமி, சரவணன், பின்னால் அமர்ந்து வந்த கணபதி உட்பட மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி இறந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன் விசாரிக்கிறார்.

News November 27, 2025

திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

image

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!