News January 24, 2025
அமைச்சர் சக்கரபாணி வாழ்த்து

ஜனவரி 24 இன்று “தேசிய பெண் குழந்தைகள் தினம் ” மேலும் “ஆணுக்குப் பெண் இலைப்பிள்ளை காண் ” என்ற மகாகவியின் வரிகளுக்குகேற்ப இன்று பெண்கள் சாதனை படைக்காத துறைகளே இல்லை எனலாம், பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குவதும், பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அமைச்சர் சக்கரபாணி தனது சமூக வலைதள இன்ஸ்டா பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 6, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, போலியான வேலை வாய்ப்பு விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கிக் தருவதாக கூறி பணம் பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதால், எந்த நபரின் போலியான வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், உடனே 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
News December 6, 2025
நத்தத்தில் தட்டி தூக்கிய அமைச்சர்!

நத்தம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில் பல்வேறு மாற்று கட்சியினர் தங்கள் கட்சிகளை விட்டு விலகி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் R.சக்கரபாணி தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் சேக்சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, ரத்தினக்குமார், தொகுதி பார்வையாளர் ரஞ்சன்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
News December 6, 2025
திண்டுக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


