News August 7, 2024

அமைச்சர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

image

அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு KKSSR & தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவி., நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 1, 2025

விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

image

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி மக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதால் மில் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுவரை புகார் அளிக்காத நபர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

News December 1, 2025

விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி காயம்

image

ஆவரங்குளம் – இடையப்பட்டி செல்லும் வழியில் அரசகுளம் கார்த்திக்(32),மனைவி கார்த்தீஸ்வரியுடன் பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்ற போது பக்கத்து தோட்டத்தில் போட்டிருந்த மின்வேலியில் இருந்த மின்சாரம் தாக்கி இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ஆவரங்குளம் குணசேகரன் மீது அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

error: Content is protected !!