News August 7, 2024
அமைச்சர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு KKSSR & தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவி., நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 15, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு

சிவகாசி பகுதியில் 300 பட்டாசு ஆலைகள் என விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில் சிவகாசி பகுதியில் சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28,29 அன்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
News November 15, 2025
விருதுநகர்: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

விருதுநகர் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <
News November 15, 2025
விருதுநகர்: நண்பரை கொலை செய்த 2 பேர் போலீசில் சரண்

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (33) அக். 29 முதல் காணவில்லை. இது தொடர்பாக அவரது தயார் அளித்த புகாரை அடுத்து, பாரதிராஜ் (35), விக்னேஷ் (34) ஆகிய மணிகண்டனின் நண்பர்கள் ஆவியூர் போலீசில் சரண் அடைந்தனர். விசாரணையில், கொடுக்கல் வாங்கல் தகராறில் மணிகண்டனை இருவரும் கொலை செய்து கொக்குளம் பாலத்தில் வீசியது தெரியவந்துள்ளது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


