News August 7, 2024

அமைச்சர்கள் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

image

அமைச்சர்கள் KKSSR ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 2022ம் ஆண்டு KKSSR & தங்கம் தென்னரசை விடுவித்து ஸ்ரீவி., நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 6, 2025

விருதுநகர்: B.E முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

விருதுநகர் மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, PG படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.40,000 – ரூ.1,40,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 6, 2025

விருதுநகர்: செயின் பறிப்பு வழக்கில் இளைஞர் கைது

image

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது மனைவி சுலோச்சனா(65) உடன் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியில் பைக்கில் சென்ற போது மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்நிலையில் டவுன் போலீசார் இன்று செயின் பறிப்பில் ஈடுபட்ட ராஜகம்பீரத்தைச் சேர்ந்த சசிகுமார்(19) என்ற இளைஞரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்

News December 6, 2025

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகில் புறத்தொடர்பு பணியாளர் காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தகவல் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் தகுதியுடையோர் www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!