News January 1, 2025
அமைச்சரை கண்டித்த நெல்லை முபாரக்

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் ஜனநாயக முறையில் குரல் கொடுத்த எடப்பாடி பழனிச்சாமியை சாடிஸ்ட் மனநிலை கொண்டவர் என அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ரகுபதியின் செயல் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
நெல்லை: கிணற்றுக்குள் விழுந்து மாணவர் பலி.!

தச்சநல்லூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (19) கல்லூரி 2ம் ஆண்டு படித்த நிலையில் நேற்று நண்பருடன் கரையிருப்பில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் விக்னேஸ்வரன் கிணற்றில் விழுந்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விக்னேஸ்வரனை மூன்று மணி நேரமாக தேடிய நிலையில் தற்போது சடலமாக மீட்கபட்டார்.
News November 22, 2025
ஊர்க்காவல் படைக்கு இன்று ஆட் தேர்வு; போலீஸ் அறிவிப்பு

நெல்லை மாநகர காவல் துறையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 7:00 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாநகர எல்லையில் வசிக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டா கல்வி சான்று போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டுமென மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
News November 22, 2025
வீட்டுக்கு வந்தவர் 16 பவுன் நகையுடன் ஓட்டம்: கேரளாவில் சிக்கினார்

சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி செல்வி இவரது வீட்டுக்கு உறவினரான கங்காதேவி என்பவர் தனது ஆண் நண்பர் ஐயப்பன் என்பவருடன் வந்துள்ளார். திடீரென இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதே நேரத்தில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடு போனது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி கேரளாவில் பதுங்கி இருந்த ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர்.


