News March 15, 2025

அமெரிக்க அதிபர் சந்திக்க நினைத்த நெல்லை நபர் தெரியுமா.?

image

நெல்லை களக்காட்டை சேர்ந்தவர் பாலம் கல்யாணசுந்தரம். சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். பாலம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் 40 ஆண்டுகளாக சமூக சேவையாற்றி தன் சொந்த பணத்தில் ரூ.30 கோடிக்கும் மேல் செலவழித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இவரை தன் தந்தையாக தத்தெடுத்தவர். அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் இந்தியா வருகையின் போது அரசு சாராமல் சந்திக்க நினைத்த நபரில் இவரும் ஒருவர். *ஷேர் பண்ணுங்க*

Similar News

News April 30, 2025

ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

image

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.

News April 29, 2025

திருநெல்வேலி சங்க தேர்தல் ரத்து

image

திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் ஸ்ரீமதி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சங்க தேர்தல் ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் ஏமாற்றமடைந்தனர்

News April 29, 2025

BREAKING நெல்லை டவுனில் வருமான வரித்துறை சோதனை

image

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!