News March 8, 2025

அமித்ஷா வருகை: கனரக வாகனங்கள் செல்ல தடை

image

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப்படை தினவிழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (மார்.7) பங்கேற்றார். இதனால், காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை எல்லையான படுநெல்லியில் உள்ள தற்காலிக சோதனைச்சாவடியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Similar News

News April 21, 2025

காஞ்சிபுரத்தில் வாட்டி வதைக்கும் வெயில்

image

காஞ்சிபுரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள கலெக்டர் அட்வைஸ்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் குடிநீர் குடில்கள், ORS கரைசல்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும், வெயிலில் நேரடியாக பணியாற்றும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் குடிநீர் இருக்க வேண்டும் என்றார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!