News August 2, 2024

‘அமராவதி ஆற்றில் குதித்து கண்ணீர் விடுகின்ற போராட்டம்’

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறுகையில், அமராவதி ஆற்றில் மூன்று நாட்களாக மூன்று டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இங்குள்ள உப்பாறு  அணை காய்ந்து கிடக்கிறது. எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் விடவில்லை என்றால் தண்ணீரில் இறங்கி கண்ணீர் விடுகின்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Similar News

News November 15, 2025

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூர் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காங்கேயம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம், அரசம்பாளையம், சாவடிபாளையம், தம்மரெட்டிபாளையம், ஒட்டபாளையம், கீரனூர், பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 15, 2025

திருப்பூர் அருகே 11 பேர் அதிரடி கைது!

image

திருப்பூர், குன்னத்தூர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் சுசீலா தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில், பணம் வைத்துச் சூதாடிய 11 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News November 15, 2025

திருப்பூர்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம்
நாளை 15-11-2025 சனிக்கிழமை மற்றும்16-011-2025 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய இரு தினங்களில் BLO வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் (அதாவது நாம் வாக்களிக்கும் இடத்தில்) படிவங்கள் வழங்குதல் மற்றும் வழங்கிய படிவங்களை திரும்ப பெரும் பணி நடைபெற உள்ளது.

error: Content is protected !!