News August 2, 2024
‘அமராவதி ஆற்றில் குதித்து கண்ணீர் விடுகின்ற போராட்டம்’

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறுகையில், அமராவதி ஆற்றில் மூன்று நாட்களாக மூன்று டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இங்குள்ள உப்பாறு அணை காய்ந்து கிடக்கிறது. எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் விடவில்லை என்றால் தண்ணீரில் இறங்கி கண்ணீர் விடுகின்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
Similar News
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
காங்கேயம் அருகே தொழிலாளி பலி

முத்தூர், கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் மணி (56). இவர் நேற்று முத்தூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார். இதில் திடிரென மணி மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

திருப்பூர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியில் மங்களம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கட்டிராஜா மற்றும் திருமூர்த்தி ஆகியோரிடம் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 950 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


