News January 24, 2025
அபராதம் விதிக்கும் e-challon கருவி

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து எஸ்பிக்கள் சுப்ரமணியன், பாலச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில்காவல் நிலைய அதிகாரிகளுக்கு e-Chellan கருவிகளை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லக்ஷ்மி சௌஜன்யா வழங்கினார் வழங்கினார்.
Similar News
News December 20, 2025
புதுவை: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
புதுவை: கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி இறப்பு

பி.எஸ்.பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யனார்(59). சம்பவத்தன்று இவர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் மூழ்கியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சையில் இருந்த அய்யனார் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
புதுவை: போலீஸ் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி, காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9,932 விண்ணப்பங்கள் ஏற்றுக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது என காவல்துறை சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.


