News April 18, 2025
அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
டெய்லர் ராஜாவுக்கு நீதிமன்ற காவல்

1998-ம் ஆண்டு கோவை தொடர்பு முக்கிய குற்றவாளியான டெய்லர் ராஜாவை, போலீசார் இன்று கைது செய்து, கோவையில் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வெர்ஜின் வெர்ஸ்டா, வருகின்ற 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News July 10, 2025
கோவையில் வேலை வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Bussiness Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் <