News April 18, 2025

அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

image

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 6, 2025

கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. பயிற்சி முடித்தால் வேலை வாய்ப்பு உறுதிசெயப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

கிணத்துக்கடவு அருகே பயங்கர விபத்து: மாணவர் பலி

image

கிணத்துக்கடவு அருகே லாரி மீது பைக் மோதியதில் பைக்கில் சென்ற 4 கல்லூரி மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு கோவை மற்றும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில், ஜெகன் (21) என்ற மாணவன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News December 5, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!