News April 18, 2025
அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (05.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
CLARIFICATION: தவறுதலாக இடம்பெற்ற MLA புகைப்படம்

சேலம் காமனேரியில், மூதாட்டி ஒருவரை முன்னாள் MLA அர்ஜுனன் தாக்கியதாக ஒரு செய்தி நேற்று வெளியானது. அப்போது அந்த வீடியோவுடன், தற்போது கோவை வடக்கு MLA-வான அம்மன் K.அர்ஜுனன் படம் தவறுதலாக பதிவிடப்பட்டு பின் நீக்கப்பட்டது. செய்திகளை கவனமுடன் பதிவிட்டும் இந்த தவறு நிகழ்ந்ததற்காக வருந்துகிறோம். மேற்கண்ட சம்பவத்துக்கும் MLA அம்மன் K.அர்ஜுனனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
News December 5, 2025
கோவை: 1 டிக்கெட் ரூ.1 லட்சமா? ஷாக்கான மக்கள்

பைலட்டுகள் பற்றாக்குறையால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோவையில் இருந்து வெளியூருக்கான பிற விமான கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. அதில் கோவை டூ சென்னைக்கு ரூ.70,000 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது. மேலும், இதே போல் திருச்சிக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. இந்த விமான கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


