News April 18, 2025
அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 3, 2025
சிங்காநல்லூர் Ex.MLA திமுகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சின்னச்சாமி திமுகவில் இணைந்துள்ளார். 2006 முதல் 2016 வரை சிங்காநல்லூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த சின்னச்சாமி திமுகவில் இணைந்திருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக கொங்கு மண்டலத்தை குறித்து வைத்து முக்கிய புள்ளிகளை தூக்கி வருகிறது.
News December 3, 2025
கோவை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

கோவை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News December 3, 2025
கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் டிச.13ம் தேதி அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். மேலும் விபரங்களுக்கு 8056358107. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


