News August 14, 2024
அன்னவாசலில் குழந்தையை கொஞ்சிய எம்பி ஜோதிமணி

கரூர் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது கூட்டத்தில் ஒரு பெண் வைத்திருந்த கைக்குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். இதில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் உடனிருந்தார். இதுகுறித்த கருத்துக்களை பதிவிடவும்.
Similar News
News September 16, 2025
புதுக்கோட்டை கலெக்டர் கொடுத்த அப்டேட் !

புதுகை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் (செப்.,19) காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், மற்றும் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார். உங்கள் பகுதி விவசாயிகளுக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 15, 2025
புதுக்கோட்டை: கண் பிரச்னைகளை தீர்க்கும் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.