News September 13, 2024

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளருக்கு மிரட்டல்?

image

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் கண்டித்தக்கது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜகவினர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.

Similar News

News November 24, 2025

விழுப்புரம்: கிணற்றில் குளித்த வாலிபர் வலிப்பு வந்து இறப்பு!

image

விழுப்புரம்: செல்லங்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (32), நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாத நிலையில், தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், அவரை பிணமாக மீட்டனர். குளித்துக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

News November 24, 2025

மேல்மலையனூர் தவற விட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு

image

மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவத்தின் போது தவறவிட்ட எட்டு சவரன் நகை_ பாதுகாப்பு பணியில் இருந்த இரு காவலர்களின் கையில் கிடைத்த நகை உரியவரிடம் இரு காவலர்கள் மூலமாகவே இன்று ஒப்படைக்கப்பட்டதுநகையின் உரிமையாளர் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

News November 24, 2025

சென்னை-விழுப்புரம் ரயில் பகுதி ரத்து

image

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் எழும்பூர்- விழுப்புரம் பிரிவில் விக்கிரவாண்டி யார்டில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை 9:45 க்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் புறப்படும் மின்சார ரயில் (66045) திண்டிவனம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திண்டிவனம்-விழுப்புரம் வரை பகுதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!