News September 13, 2024
அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளருக்கு மிரட்டல்?

அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் கண்டித்தக்கது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜகவினர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.
Similar News
News December 4, 2025
விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
News December 4, 2025
விழுப்புரத்தில் மீண்டும் சிறுத்தை!

விழுப்புரம்: சாலையம் பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தையை கண்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் கிராமம் முழுவதும் சிறுத்தையை தீவிரமாக தேடினர். ஆனால் சிறுத்தை தென்படவில்லை. அதைத்தொடர்ந்து, தற்போது கிராமத்தை சுற்றிலும் 3 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
News December 4, 2025
விழுப்புரம்: 18 ஆண்டுகளாக வீட்டிற்கே செல்லாத நபர் தற்கொலை!

விழுப்புரம்: மாம்பழப்பட்டைச் சேர்ந்த சேட்டு (57), கடந்த 18 ஆண்டுகளாக தனது வீட்டிற்கே செல்லாமல், கூலி வேலை செய்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம், முத்தாம் பாளையம் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் சால்வையால் தூக்குப்போட்டு கொண்டார். பொதுமக்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


