News January 23, 2025

அனைத்தையும் ஒன்றிய அரசே செய்ய முடியாது: செல்வப் பெருந்தகை

image

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு இன்று வருகை தந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை எங்கு போய் பேசினாலும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது. அதை தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிய அரசை செய்ய முடியாது என தெரிவித்தார்.

Similar News

News December 4, 2025

திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

திருச்சியில் வாகன ஏலம் அறிவிப்பு – போலீஸ்

image

திருச்சி மாவட்ட காவல்துறையினரால், சட்ட விரோத மதுவிற்பனை வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத இரண்டு சக்கர வாகனங்கள்-10, நான்கு சக்கர வாகனம்-2 மூன்று சக்கர வாகனம்-1 என மொத்தம் 13 வாகனங்கள் வரும் 10-ம் தேதி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 2025-26 பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபீ பருவத்தில் பயிரிடப்பட்ட சிவப்பு மிளகாய்க்கு 31.01.26 வரையிலும், வெங்காய பயிருக்கு 15.02.26 வரையிலும், வாழை, மரவள்ளி பயிருக்கு 28.02.26 வரையிலும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது. எனவே விவசாயிகள் பிரீமியம் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!