News November 22, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கள ஆய்வில் கலந்து கொண்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Similar News

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: பாராட்டுக் கடிதங்களை வழங்கிய ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நிர்ணயம் செய்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (25.11.2025) பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து கொடுக்கப்பட்டுள்ள APP-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களின் விவரங்களை கொடுத்து டிஜிட்டல் ஆதாரை பயன்படுத்துங்கள். இதன்மூலம், அன்றாட தேவைகளுக்கு இந்த QR-ஐ மட்டும் காண்பித்தால் போதுமானது. உடனே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு!

image

கள்ளக்குறிச்சி: காரனூரை சேர்ந்த ராஜனின் அக்கா மகன் பழனிவேல் தனியார் உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜன் நேற்று (நவ.24) தனியார் உணவகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு வேலை முடிந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக ராஜன் நேற்று அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!