News November 23, 2024
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.
Similar News
News September 18, 2025
ஓசூர் அருகே நாட்டு வெடி விபத்தில் சிக்கிய 4 பேர்

ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (40) தனது மாட்டுக்கொட்டகையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தீப்பொறி பறந்து நாட்டு வெடிகுண்டுகள் மீது விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பெரியசாமி, அவரது மனைவி புஷ்பா (36), மகன் சரண் (13), உறவினர் ஹரிஷ் (30) என 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறது
News September 18, 2025
ஓசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என ஒசூா் அனைத்துக் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. ஒசூரில் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றவும், வணிக மையம் அமைக்கவும், கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை இரயில்வே திட்டத்தை நிறைவேற்றவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
News September 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க