News November 23, 2024

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

Similar News

News October 19, 2025

செங்கல்பட்டில் 28 பட்டாசு கடைக்கு அனுமதி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி, 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து, 28 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், நேற்று உத்தரவிட்டுள்ளார்.

News October 19, 2025

செங்கல்பட்டில் நிலம் வாங்க போறிங்களா?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<>இணையதளத்தில் <<>>சென்று, ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.

News October 19, 2025

செங்கல்பட்டு: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

image

செங்கல்பட்டு மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க

error: Content is protected !!