News November 23, 2024
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 4, 2025
திருவாரூர்: வட்டார கல்வி அலுவலர்கள் சந்திப்பு

திருவாரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் சௌந்தர்ராஜன் தற்போது பணி மாறுதலில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பணியாற்றி வரும் வட்டார கல்வி அலுவலர்கள் இணைந்து அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
News December 4, 2025
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் WAR ROOM அமைப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக வெள்ள கட்டுப்பாட்டு அறை (WAR ROOM) திறந்து வைக்கப்பட்டு 24 மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை சம்பந்தமான முன்னெச்சரிக்கைகளை தெரிந்து கொள்ள 1077 என்ற எண்ணிற்கு எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 4, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


