News November 23, 2024
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 22, 2025
திருவாரூர்: இந்த தேதிகளை மறக்காதீர்கள்!

திருவாரூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, சிறப்பு முகாம் அட்டவணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 28 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும்; ஜனவரி 3 ஜனவரி 4 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
திருவாரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க….
News December 22, 2025
திருவாரூர்: புதிய காவலர்கள் தங்கும் விடுதி திறப்பு

முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட 2000 காவலர்கள் தங்கும் விடுதியான காவலர் பாளையம் கட்டிடத்தினை இன்று (டிச.22) காலை 10 மணியளவில் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதே நேரத்தில் முத்துப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன், எஸ்.பி கருண்கரட் பங்கேற்கிறனர்.


